கோடு புள்ளிகளால் ஆனது. ஒவ்வொரு புள்ளியும் இப்பேரியக்க பிரபஞ்சத்தின் குறியீடுகளே. ஓவியம், மொழியுரு, சிற்பக்கலை எல்லாம் ஒரு ஆழ்ந்த நோக்கில் பல புள்ளிகளின் தொகுப்பே. கணிதம் விஞ்ஞானம் போன்ற வரையறைசூத்திரங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தகவல், புள்ளிகளால் இணைக்கப் பெறுகிறது. இரண்டு புள்ளிகளுக்கு இடையே மிகத் துல்லியமான ஒரு இடைவெளி, இடைவெளியற்ற காட்சியாய் பரிணாமம் கொள்ளும். அது வரி வடிவம், எழுத்துரு, கோடு, வளைவுகளாய், ஓவியமாய், சிற்பமாய் பதிவு செய்கிறது.
கலை:
எல்லா கலைகளுமே மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியினால் சிருஸ்டிக்கப்படுவதே. அந்த சக்தி நூறு சதவீதம் நேர்மையுடன், நூறு சதவீதம் முழுமையாய் யாரொருவர் பயன்படுத்துகிறாரோ அப்பொழுது அவருடன் இணைந்து தன்னியக்கமாய் இயங்கும். அப்பொழுது
எல்லா கலை படைப்புகளின் மூலாதாரமே இந்த இறை சக்தி தான். பேரியக்க பிரபஞ்ச சக்தி மட்டுமே.
வெளிப்படும் தன்மை, ரூபங்களில் வேறு வேறு தளங்களில் இயங்கும் இந்த சக்தி ஓன்று மட்டுமே உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது. யாரும் எப்பொழுதும் எவ்விதத்திலும் உரிமையோ, உடைமையோ கொள்ள இயலாதது. சாதி, மத, இனம், சமய சடங்குகளுக்குள் இதை இழுத்துக் கட்ட முடியாது. என்னைப் பொறுத்தவரை கலை வேறு வேறு தளங்களில், வேறு வேறு வடிவங்களில் வெளிப்பட்டாலும் இந்த இறை சக்தியே அதன் வேர். அசைக்க முடியாத இந்த உண்மையை எல்லாக் கலைஞர்களும் நிச்சயம் உணருவார்கள்.
அலுமினிய சிற்பம்.
அலுமினிய தகட்டில் செதுக்குவதால் இதற்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. கல்லில், மரத்தில் செதுக்கும் சிலைகள் பஞ்சலோகத்தில் வர்க்கும் சிலைகள், மண்ணில் உருவாக்கும் சிலைகள் என பலவகை சிற்பங்கள் உண்டு. அலுமினிய தகட்டில் செதுக்கும் செயலால் இதுவும் சிற்ப வகையில் ஓன்று என்றே கருதுகிறேன்.
முழுக்க முழுக்க இறை சக்தியின் தொடர்போடு தான் இந்த அலுமினிய சிற்பம்வடிவமைக்கப்படுகிறது.
தெய்வீக உருவங்கள் மட்டும் அல்ல. குருமார்கள், சித்தர்கள், மகரிஷிகள், அழகுசார்ந்த அனைத்து ஓவியங்களையும் செதுக்கும் போது நான் உணரும் ஒரு பரவசநிலை சாதரண சமயங்களில் இருப்பதில்லை என்பதை நன்கு அறிவேன். என்னுடன் சம்பந்தப்பட்ட இக்கலை மீது ஆர்வமுள்ள சிலரும் இதனை அறிவார்கள்.
கலை:
எல்லா கலைகளுமே மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியினால் சிருஸ்டிக்கப்படுவதே. அந்த சக்தி நூறு சதவீதம் நேர்மையுடன், நூறு சதவீதம் முழுமையாய் யாரொருவர் பயன்படுத்துகிறாரோ அப்பொழுது அவருடன் இணைந்து தன்னியக்கமாய் இயங்கும். அப்பொழுது
ஒரு கவிதை
ஒரு ஓவியம்
ஒரு நடனம்
ஒரு சிற்பம்
ஒரு இசை
ஆக எல்லாவிதமான கலைகளும் அவரவர் மூலம் தன்னிச்சையாய் தன்னையே வெளிப்படுத்திக் கொள்ளும் அந்த அப்பாற்பட்ட சக்தி. கடவுள் நம்பிக்கை உடையோருக்கு அதுவே இறை சக்தி. ஆன்மீக நம்பிக்கை அற்ற யாருக்கும் அதுதான் பிரபஞ்ச சக்தி, இயற்கை சக்தி.ஒரு ஓவியம்
ஒரு நடனம்
ஒரு சிற்பம்
ஒரு இசை
எல்லா கலை படைப்புகளின் மூலாதாரமே இந்த இறை சக்தி தான். பேரியக்க பிரபஞ்ச சக்தி மட்டுமே.
வெளிப்படும் தன்மை, ரூபங்களில் வேறு வேறு தளங்களில் இயங்கும் இந்த சக்தி ஓன்று மட்டுமே உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது. யாரும் எப்பொழுதும் எவ்விதத்திலும் உரிமையோ, உடைமையோ கொள்ள இயலாதது. சாதி, மத, இனம், சமய சடங்குகளுக்குள் இதை இழுத்துக் கட்ட முடியாது. என்னைப் பொறுத்தவரை கலை வேறு வேறு தளங்களில், வேறு வேறு வடிவங்களில் வெளிப்பட்டாலும் இந்த இறை சக்தியே அதன் வேர். அசைக்க முடியாத இந்த உண்மையை எல்லாக் கலைஞர்களும் நிச்சயம் உணருவார்கள்.
அலுமினிய சிற்பம்.
அலுமினிய தகட்டில் செதுக்குவதால் இதற்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. கல்லில், மரத்தில் செதுக்கும் சிலைகள் பஞ்சலோகத்தில் வர்க்கும் சிலைகள், மண்ணில் உருவாக்கும் சிலைகள் என பலவகை சிற்பங்கள் உண்டு. அலுமினிய தகட்டில் செதுக்கும் செயலால் இதுவும் சிற்ப வகையில் ஓன்று என்றே கருதுகிறேன்.
முழுக்க முழுக்க இறை சக்தியின் தொடர்போடு தான் இந்த அலுமினிய சிற்பம்வடிவமைக்கப்படுகிறது.
தெய்வீக உருவங்கள் மட்டும் அல்ல. குருமார்கள், சித்தர்கள், மகரிஷிகள், அழகுசார்ந்த அனைத்து ஓவியங்களையும் செதுக்கும் போது நான் உணரும் ஒரு பரவசநிலை சாதரண சமயங்களில் இருப்பதில்லை என்பதை நன்கு அறிவேன். என்னுடன் சம்பந்தப்பட்ட இக்கலை மீது ஆர்வமுள்ள சிலரும் இதனை அறிவார்கள்.
No comments:
Post a Comment